திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் தொடர்மழையின் காரணமாக அங்கு நடைபெற இருந்த படகு போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் கோடை விழாவில் ஒரு பகுதியாக படகு போட்டி நடைபெறுவது அங்கு வழக்கம். அதன்படி இன்று நடைபெற இருந்த போட்டி ரத்து செய்யப்பட்டு மீண்டும் மே 25ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது