ஜப்பானின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான டோக்கியோவில் இயங்கும் டோக்கியோ மெட்ரோ நிறுவனம், தனது ஆரம்ப பொது வழங்கல் (IPO) மூலம் பெரும் தொகையை திரட்ட உள்ளது. முதலில் ஒரு பங்கின் விலை 1,100 யென் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 1,100 முதல் 1,200 யென் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த உயர்வுடன், நிறுவனம் 349 பில்லியன் யென் (சுமார் 2.35 பில்லியன் அமெரிக்க டாலர்) வரை திரட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆறு ஆண்டுகளில் ஜப்பானில் நடத்தப்பட்ட IPOக்களிலேயே மிகப்பெரிய தொகையாகும். இந்த IPO-ன் இறுதி விலை அக்டோபர் 15 ஆம் தேதி நிர்ணயிக்கப்படும், மேலும் டோக்கியோ பங்குச் சந்தையில் அக்டோபர் 23 ஆம் தேதி இருந்து இந்த பங்குகள் வர்த்தகமாகத் தொடங்கும்.