விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளி, பிரத்தியேக விண்கலம் மூலம் இன்று பூமிக்கு கொண்டுவரப்படுவதாக நாசா அறிவித்துள்ளது.
நிலவில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரியைக் கொண்டு, அதனில் செடி வளர்க்க ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறிய பசுமை குடில் ஒன்றில், தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. குட்டை ரக தக்காளியான இது, 100 நாட்களுக்கு மேலாக அங்கு பயிராக உள்ளது. 90, 97 மற்றும் 104 வது நாட்களில், தக்காளி அறுவடை செய்யப்பட்டுள்ளது. இதனை பதப்படுத்தி, ஊட்டச்சத்து சார்ந்த ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆராய்ச்சி மூலம், எதிர்காலத்தில், விண்வெளி பயணங்களின் போது உடனடியாக அங்கிருந்தே உணவு பெற முடியுமா என்பது தெரியவரும்.
நாசாவின் தக்காளி பயிரிடப்பட்டதைப் போலவே, ஜப்பான் விண்வெளி ஆய்வு நிலையம் சார்பில் விண்வெளியில் தயாரிக்கப்பட்ட கிரிசடல்களும் இன்று பூமியை வந்தடைய உள்ளன.