தமிழகம் கர்நாடகா இடையே காவிரி நீர் பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த ஆண்டும் பருவமழை பொய்த்து போனதால் நீர்வரத்து தமிழகத்திற்கு வெகுவாக சரிந்துள்ளது. இதனால் காவிரி நீரை நம்பி தமிழக விவசாயிகள் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. டெல்டா மாவட்ட விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். இதற்கு காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகா அரசுக்கு வினாடிக்கு ஐந்தாயிரம் கன அடி நீர் 15 நாட்களுக்கு திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது. இதனை கர்நாடக அரசு மறுத்தது. மேலும் கர்நாடக அரசு பெயரளவில் மட்டுமே நீரை திறந்து விட்டது. இதனிடையே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது என கர்நாடக மாநிலத்தில் பெங்களூர், மைசூர், மண்டியா, சாம்ராஜ்யம் நகர் உள்ளிட்டை மாவட்டங்களில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. இதில் 20 நாட்களுக்கும் மேலாக மண்டியா மாவட்டத்தில் மட்டும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் போராட்டத்தை தீவிர படுத்த விவசாயிகள் முடிவு செய்துள்ள நிலையில் நாளை 26 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு 100க்கும் கன்னட அமைப்புகள் ஆதரவுகள் தெரிவித்துள்ளன. இதனால் சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.