குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நாளை நடைபெறவுள்ளது.
18 துணை கலெக்டர்கள், 26 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர், 25 வணிகவரி உதவி ஆணையர், 7 ஊரக மேம்பாடு உதவி இயக்குனர், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய குரூப்-1 பதவிகளுக்கான தேர்வு நாளை நடைபெறவுள்ளது.
இந்த பதவிகளுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்தவகையில் முதல்நிலைத் தேர்வுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்துள்ளனர். அக்டோபர் மாதம் 30-ந்தேதி இந்த தேர்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக அது தள்ளிவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது. இந்நிலையில் தள்ளிவைக்கப்பட்ட முதல்நிலைத் தேர்வு நாளை நடைபெற உள்ளது.