அமெரிக்காவில் உள்ள அர்கான்சாஸ் மாகாணத்தை சூறாவளிப் புயல் தாக்கியுள்ளது. இதன் காரணமாக, 24 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், 78000 க்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருவதாக கூறப்படுகிறது. இதுவரையில், உயிரிழப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
நேற்று ஏற்பட்ட இந்த சூறாவளி புயலால், பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், மீட்பு நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மிசிசிபியை சேர்ந்த வானியலாளர் நிக்கோலஸ் பிரைஸ் இதுகுறித்து பேசும் போது, “கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு சூறாவளிக்காற்று நிலப்பகுதியில் நீடித்தது. மேலும், 274 கிலோ மீட்டர் தொலைவிற்கு சேதத்தை உருவாக்கியுள்ளது” என்று கூறினார். சூறாவளி பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் கூறுகையில், தங்கள் வீடுகளின் கூறைகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாக தெரிவித்தனர். மீட்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், அவசரகால நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தனர்.