டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம்

October 7, 2023

டெல்டா மாவட்டங்களில் வருகின்ற 11ஆம் தேதி காவேரி திறந்து விட வேண்டிய நீரை திறந்து விட வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடைபெற இருக்கின்றன. தஞ்சாவூரில் இன்று காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியாக்கம் ஆலோசனை நடைபெற்றது. இதில் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு அரசின் சார்பில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் இந்த ஆண்டும் செயல்படுத்தப்பட்டதால் கூடுதலான பரப்பளவில் சாகுபடி நடைபெற்றது. இதில் காவிரி மேலாண்மை […]

டெல்டா மாவட்டங்களில் வருகின்ற 11ஆம் தேதி காவேரி திறந்து விட வேண்டிய நீரை திறந்து விட வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடைபெற இருக்கின்றன.

தஞ்சாவூரில் இன்று காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியாக்கம் ஆலோசனை நடைபெற்றது. இதில் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு அரசின் சார்பில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் இந்த ஆண்டும் செயல்படுத்தப்பட்டதால் கூடுதலான பரப்பளவில் சாகுபடி நடைபெற்றது. இதில் காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பின்படி கொடுக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடாத காரணத்தினால் குறுவை சாகுபடி நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர்கள் 2 லட்சம் ஏக்கர் வரை காய்ந்து கருகிவிட்டன. மீதமுள்ளவற்றை பாதுகாத்திடவும் அதன் சாகுபடி பணிகளை தொடங்கவும், கர்நாடக அரசு கொடுக்க வேண்டிய நீரைத் தொடர்ந்து வழங்கவும் கூறி 11ஆம் தேதி பல கட்ட போராட்டங்கள் நடைபெற உள்ளது. மேலும் தமிழக அரசு பலமுறை மத்திய அரசிடம் வலியுறுத்திய பின்பு மத்திய அரசை நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் தஞ்சாவூர்,திருவாரூர்,நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், ஆகிய மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu