சுற்றுலாத்துறை முன்னோடி வி.கே.டி. பாலன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
சுற்றுலாத்துறையில் முன்னணி நபராக இருந்த வி.கே.டி. பாலன் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரின் இறுதிச்சடங்கு இன்று (நவம்பர் 12) சென்னை மந்தைவெளியில் அவரது இல்லத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1954-ஆம் ஆண்டு திருச்செந்தூரில் பிறந்த வி.கே.டி. பாலன், 1981-ஆம் ஆண்டில் சென்னையில் குடிபெயர்ந்தார். பின்னர் இவர் தன் தொழிலை தொடங்கி சுற்றுலா துறையில் முன்னேறி, பல உயர்ந்த நிலைகளுக்கு சென்றார். மேலும் இவருக்கு தமிழ்நாடு அரசு அவருக்கு "கலைமாமணி" விருதினை வழங்கியது. சமீபமாக, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட வி.கே.டி. பாலன், பக்கவாதம் மற்றும் உடல்நலம் நலிவுற்ற நிலையில் நேற்று (நவம்பர் 11) காலமானார். அவரது உடல் தற்போது அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக. வைக்கப்பட்டுள்ளது.