இந்தியா - மலேசியா இடையேயான வர்த்தக பரிவர்த்தனைகள் இந்திய ரூபாயிலும் நடைபெற உள்ளது.
சர்வதேச நாடுகளுடன் வர்த்தகம் செய்யும்போது இந்திய ரூபாயிலும் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு ஜூலை மாதம் முடிவு செய்தது. இதையடுத்து இந்தியா - மலேசியா இடையேயான வர்த்தக பரிவர்த்தனைகள் இனி இந்திய ரூபாயிலும் நடைபெறும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
பிறநாட்டு பணத்துடன் (அமெரிக்க டாலர் உள்பட) சேர்த்து மலேசியாவுடன் மேற்கொள்ளப்படும் வர்த்தக பரிவர்த்தனைகள் இனி இந்திய ரூபாயிலும் மேற்கொள்ளப்படும். எனவே மலேசியாவுடனான வர்த்தகத்தில் இந்திய ரூபாய் பயன்படுத்தப்படுவதால் சர்வதேச அளவில் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.