ரஷ்யாவில் இரண்டு கப்பல்களும் ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில் கப்பல்களில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கசிந்தது.
ரஷ்யாவின் கெர்ச் ஜலசந்தியில் கடந்த வாரம் 2 கச்சா எண்ணெய் கப்பல்கள் சென்று கொண்டிருந்தன, இவை சுமார் 9 ஆயிரம் டன் எரிபொருள் கொண்டிருந்தன. அனபா பகுதியில் புயல் தாக்கியபோது, இரண்டு கப்பல்களும் ஒன்றுக்கொன்று மோதின. இந்த விபத்தில் கப்பல்களில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கசிந்தது. தற்போது, 4 ஆயிரம் டன் எண்ணெய் கடலில் பரவியுள்ளதுடன், அந்த எண்ணெய் கசிவு காரணமாக 2 டால்பின்களும் செத்து கரையில் ஒதுங்கியுள்ளன. கச்சா எண்ணெய் கடலில் பரவுவதைத் தடுக்க, அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.