6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

September 17, 2022

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஏஜி பாபு காவல் தொழில்நுட்ப பிரிவு ஐஜி ஆகவும், ஆனி விஜயா காவலர் பயிற்சி பிரிவு டிஐஜி ஆகவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அதோடு காத்திருப்போர் பட்டியலில் இருந்த செல்வகுமார் கடலோர பாதுகாப்பு குழும கண்காணிப்பாளராகவும், சீருடை பணியாளர் தேர்வு வாரிய கண்காணிப்பாளராக இருந்த ராதாகிருஷ்ணன் […]

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஏஜி பாபு காவல் தொழில்நுட்ப பிரிவு ஐஜி ஆகவும், ஆனி விஜயா காவலர் பயிற்சி பிரிவு டிஐஜி ஆகவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

அதோடு காத்திருப்போர் பட்டியலில் இருந்த செல்வகுமார் கடலோர பாதுகாப்பு குழும கண்காணிப்பாளராகவும், சீருடை பணியாளர் தேர்வு வாரிய கண்காணிப்பாளராக இருந்த ராதாகிருஷ்ணன் சேலம் மாநகர துணை ஆணையராகவும், தென் மண்டல பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக இருந்த விஜயகுமார் சீருடை பணியாளர் தேர்வு வாரிய கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

குடிமைப் பொருள் சிஐடி பிரிவில் கண்காணிப்பாளராக இருந்த பாஸ்கரன் திருப்பூர் மாநகர துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu