பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளிகளில் பணியாற்றும் கூடுதல் உடற்கல்வி ஆசிரியர்களை இடம் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்பு அவசியமாக உள்ளது. இதில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் உடற்கல்வி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில் அரசு பள்ளிகளில் உடற்கல்விக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு இடையில் கூடுதலாக பணியாற்றி வரும் உடற்கல்வி ஆசிரியர்களை குறைக்கும் நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. அதன்படி அரசு பள்ளிகளில் போதிய அளவு உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் காலியாக இருந்த நிலையில் அந்த இடங்களுக்கு புதிய உத்தரவின் படி கூடுதலாக உள்ள உடற்கல்வி ஆசிரியர்களை இட மாற்றம் செய்ய பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அவ்வகையில் 700 மற்றும் அதற்கு குறைவான மாணவர்கள் கொண்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர், 700க்கும் அதிகமாக மாணவர்கள் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் இரண்டு உடற்கல்வி ஆசிரியர்கள், 701 முதல் 1500 வரை உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் ஒரு உடற்கல்வி ஆசிரிய,ர் ஒரு உடற்கல்வி இயக்குனர் என இரண்டு பேர், 1500 க்கு மேல் உள்ள பள்ளிகளில் மேல்நிலைப் பள்ளிகளில் இரண்டு உடற்கல்வி ஆசிரியர்கள், ஒரு உடற்கல்வி இயக்குனர் நிலை -2 அல்லது நிலை -1 என மொத்த மூன்று பேர் அனுமதிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.