தமிழகத்தில் முக்கிய துறைகளில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் நிர்வாக ரீதியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சுற்றுச்சூழல் துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாகு சுகாதாரத்துறை செயலாளர் ஆகவும், சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி ஊரக வளர்ச்சித் துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுப்பணித்துறை செயலாளர் மங்கத் தராம் சர்மாவும், வனத்துறை செயலாளராக செந்தில்குமாரும், நீர்வளத்துறை செயலாளராக மணிவாசன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று சுற்றுலா மற்றும் இந்த சமய அறநிலையத்துறை செயலாளராக சந்திரமோகன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உயர் கல்வித் துறை செயலாளராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்