பாராளுமன்றத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமரை எதிர்த்து திருநங்கை போட்டியிட உள்ளார்.
பிரதமரை எதிர்த்து உத்தரபிரதேசத்தில் நிர்மோகி அகாடா என்ற சாதுக்கள் அமைப்பை சேர்ந்த திருநங்கை மகாமண்டலேஸ்வரர் ஹேமாங்கி சாகி போட்டியிட உள்ளார். துறவியான இவர் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்து மதத்தை பரப்பி வருகிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பேட்டியில் மோடிக்கு எதிராக நான் போட்டியிடவில்லை. திருநங்கைகளின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்காக அரசியலில் இறங்கியுள்ளேன். மேலும் மத்திய அரசு திருநங்கைகள் குறித்து கவலைப்படவில்லை. மத்திய அரசின் சார்பில் திருநங்கைகள் நலனுக்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டிருந்தாலும் மத்திய அரசு இது குறித்தான விளம்பரங்கள் செய்வதில்லை. இந்த சமூகத்தில் திருநங்கைகளும் ஒரு அங்கம். எந்த ஒரு அரசியல் கட்சியும் திருநங்கைகளை வேட்பாளராக அறிவிப்பதில்லை. அகில இந்திய மகாசபை என்னை வேட்பாளராக அறிவித்து நாட்டுக்கு முன் உதாரணத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.














