போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை அரசு தரப்பில் போக்குவரத்து துறை முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்த உள்ளது.
போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் கடந்த சில மாதங்களாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வு திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றன. இதனை அடுத்து அரசு தரப்பில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுவரை நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், மீண்டும் நாளை போக்குவரத்து துறை போக்குவரத்து துறைச் சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இதில் இணை ஆணையர் முன்னிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் மதியம் மூன்று மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது.