ஜனவரி 9 முதல் போக்குவரத்து தொழிற்சங்கம் வேலைநிறுத்தம் அறிவிப்பு

January 4, 2024

சென்னையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனை அடுத்து வரும் ஜனவரி 9ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக ஏஐடியூசி, சிஐடியு சங்கங்கள் தெரிவித்துள்ளன. ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள், மற்றும் தொழிலாளர் நலத்துறை இடையே இருமுறை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதற்காக ஜனவரி 9ம் தேதி முதல் […]

சென்னையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனை அடுத்து வரும் ஜனவரி 9ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக ஏஐடியூசி, சிஐடியு சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள், மற்றும் தொழிலாளர் நலத்துறை இடையே இருமுறை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதற்காக ஜனவரி 9ம் தேதி முதல் ஏஐடியூசி, சிஐடியு உள்ளிட்ட சங்கங்கள் ஒரு மனதாக முடிவு செய்துள்ளன. இதனை அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னின்று நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த எட்டு வருடங்களாக ஓய்வு பெற்றவர்களுக்கு எதுவும் வழங்கவில்லை என சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்த சௌந்தரராஜன் கூறுகிறார்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu