அமெரிக்க வீரர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வடகொரியா அறிவிப்பு

August 3, 2023

தென்கொரியாவில் இருந்து வடகொரியா வந்த அமெரிக்க வீரர் டிராவிஸ் கிங், காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வடகொரியா உறுதி செய்துள்ளது. கடந்த ஜூலை 18ம் தேதி, சுற்றுலா சென்றிருந்தபோது, தென்கொரிய எல்லையைத் தாண்டி வடகொரியாவுக்குள் டிராவிஸ் கிங் என்ற அமெரிக்க வீரர் நுழைந்துள்ளார். அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து அறிய ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் முயற்சித்து வந்தனர். அதன்படி, அவர் வட கொரியாவில் காவலில் வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவரை தாய் நாட்டுக்கு அனுப்புவது குறித்த எந்த நடவடிக்கையிலும் ஐக்கிய நாடுகள் […]

தென்கொரியாவில் இருந்து வடகொரியா வந்த அமெரிக்க வீரர் டிராவிஸ் கிங், காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வடகொரியா உறுதி செய்துள்ளது.

கடந்த ஜூலை 18ம் தேதி, சுற்றுலா சென்றிருந்தபோது, தென்கொரிய எல்லையைத் தாண்டி வடகொரியாவுக்குள் டிராவிஸ் கிங் என்ற அமெரிக்க வீரர் நுழைந்துள்ளார். அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து அறிய ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் முயற்சித்து வந்தனர். அதன்படி, அவர் வட கொரியாவில் காவலில் வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவரை தாய் நாட்டுக்கு அனுப்புவது குறித்த எந்த நடவடிக்கையிலும் ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் ஈடுபடவில்லை. அவர் இருப்பிடம் பற்றி மட்டும் அறிந்து கொண்டு தகவலை வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்க ராணுவ படையை சேர்ந்த டிராவிஸ் கிங், தென்கொரியாவில் கொலை குற்றம் சுமத்தப்பட்டு இருந்தார். இது தொடர்பாக தண்டனை அனுபவித்து வந்த அவர், அமெரிக்காவில் ஆஜராக ஆயத்தமாக இருந்தார். இந்த நிலையில், விமான நிலையத்திலிருந்து தப்பி, அவர் வெளியேறியுள்ளது தெரியவந்துள்ளது. அவர், தென் கொரியா மற்றும் வடகொரியா இடையில் உள்ள ராணுவ பாதுகாப்பு இல்லாத இடத்தில் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது எல்லை தாண்டிய குற்றத்துக்காக வட கொரியாவால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu