டிரெல்லோ தளத்தை பயன்படுத்தும் மக்களின் தரவுகள் டார்க் வெப்பில் கசிந்துள்ளன. கிட்டத்தட்ட 15 மில்லியன் பேரின் தரவுகள் கசிந்ததால், சர்வதேச அளவில் மிகப்பெரிய தகவல் கசிவு சம்பவம் ஆக இது கருதப்படுகிறது.
பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் நிர்வாக பணிகளை மேற்கொள்ள டிரெல்லோ தளத்தை பயன்படுத்தி வருகின்றன. அதன்படி, எண்ணற்ற பேரின் தகவல்கள் அதில் இணைந்துள்ளன. இந்த நிலையில், டிரெல்லோ தளத்தை பயன்படுத்துவோரின் பெயர், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட முக்கிய தகவல்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளன. எக்ஸ் பதிவு ஒன்றின்படி 1511516 எண்ணிக்கையிலான மக்களின் தகவல்கள் கசிந்து உள்ளதாக கூறப்படுகிறது. இது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.