சென்னையில் வில்லிவாக்கம் மற்றும் கட்பாடி இடையே வந்தே மெட்ரோ ரயிலின் சோதனை இயக்கம் தொடங்கியது.
சென்னை மற்றும் அதன் புறநகர் மக்களை இணைக்கும் வகையில் 4 வழித்தடங்களில் தினமும் 600 மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.இந்நிலையில் தென் சென்னையில் வந்தே மெட்ரோ ரயில்கள் இயக்க சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி வில்லிவாக்கம் - காட்பாடி இடையே சோதனை ரயில் இயக்கபட்டுள்ளது. மேலும் சோதனை இயக்கம் முடிவடைந்ததும் அதன் குறைகள் சரி செய்யப்பட்டு மீண்டும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.