பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் மூவர்ண கொடி உயர பறக்கவிடப்பட்டு உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 21 முதல் 24 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவரை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணியான ஜில் பைடன் ஆகியோர், வரும் ஜூன் 21-ந்தேதி வரவேற்கின்றனர். அவரை வரவேற்கும் விதமாக வாஷிங்டன் டி.சி.யில் இந்தியாவின் மூவர்ண கொடி உயர பறக்கவிடப்பட்டு உள்ளது.
இது குறித்து கூறிய அமெரிக்க வாழ் இந்தியர்கள் பிரதமர் மோடியின் அமெரிக்க வருகையை முன்னிட்டு வெள்ளை மாளிகை முன் மூவர்ண கொடியை பார்க்கும்போது, புதிய தலைமுறைக்கான வரவாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் நவீன தொழில் நுட்பங்கள் பெருகுவதற்கான கவுரவம் இது எனவும் கூறினர். பிரதமர் மோடியின் இந்த பயணத்தில், வெள்ளை மாளிகையின் தெற்கு பகுதியில் இந்திய சமூக மக்கள் 7 ஆயிரம் பேர் கலந்து கொள்ள கூடிய கூட்டத்தில் உரையாற்றுகிறார். அவரை வரவேற்க அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என்று கூறினர்.