பாராளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தனித்து போட்டியிட்டார்.
பாராளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி காங்கிரஸ் கட்சியை விட்டு தனித்து போட்டியிட்டார். இதில் சந்தோஷ் காளி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கையில் எடுத்து பா.ஜனதா மம்தா பானர்ஜி கட்சியை ஓரம் கட்ட நினைத்தது. தேர்தலுக்குப் பிந்தையை கருத்துக்கணிப்பிலும் பாஜக அதிக இடங்களை பிடிக்கும் என தகவல் வெளியாகியது. இந்நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதில் காலை நிலவரப்படி பா.ஜனதா முன்னிலை வகித்து வந்த நிலையில் நேரம் செல்ல செல்ல திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மம்தா பானர்ஜி முன்னிலை வகிக்க தொடங்கினார். தற்போது வரை 29 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது. 12 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது