உலகளாவிய காலநிலை கண்காணிப்புக்காக திரிஷ்ணா செயற்கைக்கோளை இஸ்ரோ செயல்படுத்த தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள வெப்பநிலை மற்றும் நீர் மேலாண்மையை அறிந்து கொள்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் பிரான்ஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான சிஎன்இஎஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தோ - பிரெஞ்ச் அக சிவப்பு பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் என்ற திரிஷ்ணா திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இந்த செயற்கைக்கோள் இந்தியா, ஐரோப்பியா அதிக வெப்பத்தில் தாக்கப்படும் பொழுது பூமியில் ஏற்படும் காலநிலை தாக்கங்களுக்கான தரவு புள்ளிகளை கண்காணிக்கும். இது நிலத்திலிருந்து நீர் ஆவியாதலை அளவிடுகிறது. மேலும் இந்த செயற்கைக்கோள் வெப்ப முரண்பாடுகள் மற்றும் கூர்முனை, வெப்ப உமிழ்வு உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை கண்காணிக்கும். தற்போது 2025 ஆம் ஆண்டில் இந்த ஆண்டுகள் ஆயுட்காலத்துடன் இயக்குவதற்காக தற்காலிகமாக இந்த செயற்கைக்கோள் அமைக்கப்பட்டு வருகிறது. காலநிலை மாற்றம் தணிக்கும் முயற்சிகள், காலநிலை மாற்றத்தில் மானுடவியல் உள்ளிட்ட பல்வேறு பல்வேறு நீர் மற்றும் உணவு பாதுகாப்பு சவால்களை திரிஷ்ணா பணி எதிர்கொள்ளும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்