செப்டம்பர் 10-ம் தேதி ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே நேரடி விவாத நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரச்சாரத்தின் போது ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். இந்நிலையில் அடுத்த மாதம் 10ஆம் தேதி ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே நேரடி விவாத நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதுகுறித்து ஏபிசி செய்தி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் விவாதம் ஒன்றிற்கு ஒப்புக்கொண்டுள்ளனர் என்று கூறியுள்ளது. இது குறித்து டிரம்ப் கூறுகையில் விவாதங்கள் நடத்துவது மிகவும் முக்கியமானது. இதனை நான் எதிர்நோக்கி இருக்கிறேன். அப்பொழுதுதான் நமது சாதனை நேரடியாக மக்களை சென்றடைய முடியும் என்று கூறினார்.
அமெரிக்க தேர்தல் தொடர்பான புதிய கருத்துக்கணிப்பில் ட்ரம்பை விட கமலா ஹாரிஸ் 5 புள்ளிகள் முன்னிலையில் இருக்கிறார். ட்ரம்ப் 37 சதவீத வாக்குகளையும் கமலா ஹாரிஸ் 42 சதவீத வாக்குகளையும் பெற்றார்கள்.