மஸ்க் தனது சமூக ஊடகத்தில், டிரம்ப் குறித்து அளவு மீறி கருத்து தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் இடையே வரி மசோதாவைத் தொடர்ந்து கடும் மோதல் ஏற்பட்டது. டிரம்ப் அரசு கொண்டுவந்த 'பிக் பியூட்டிஃபுல் பில்' மசோதாவை மஸ்க் "முட்டாள்தனம்" என விமர்சித்ததால், அரசு ஒப்பந்தங்களை நிறுத்த டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து, எப்ஸ்டீன் விவகாரத்தில் டிரம்பின் பெயர் இருப்பதாக மஸ்க் குற்றம் சாட்டினார். இந்நிலையில், மஸ்க் தனது சமூக ஊடகத்தில், டிரம்ப் குறித்து அளவு மீறி கருத்து தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். இதன் மூலம் இருவரின் மோதல் முடிவுக்கு வந்திருக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.