அமெரிக்க அரசின் புதிய மசோதாவால் ஏற்பட்ட முரண்பாடுகள், டிரம்ப்-மஸ்க் நட்பில் பிளவை ஏற்படுத்தின.
அமெரிக்க அதிபர் டிரம்பும், தொழிலதிபர் எலான் மஸ்க்கும் வரி மசோதா விவகாரத்தில் சமீப காலமாக கடுமையாக மோதிக் கொண்டுள்ளனர். சமூகவலைதளங்களில் குற்றச்சாட்டுகள் பரிமாறப்பட்டு வரும் நிலையில், மஸ்க் நடுத்தர மக்களுக்காக புதிய கட்சி தேவை என கருத்துக்கணிப்பு நடத்த, அதில் பெரும்பான்மையினர் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து ‘தி அமெரிக்கன் பார்ட்டி’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்குவதாக மஸ்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது அமெரிக்க அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடக்கவாய்ப்பு உருவாக்கியுள்ளது.