இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பென்டகன் அதிகாரி காஷ்யப் பட்டேல், அமெரிக்க புலனாய்வு அமைப்பு எப்.பி.ஐ. இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு டிரம்ப், ஜனவரி 20-ந்தேதி பதவி ஏற்றுக்கொள்ள உள்ள நிலையில், தனது மந்திரிசபையில் நியமிக்கப்பட்டுள்ள நபர்களின் பெயர்களை அறிவித்து வருகிறார். இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். அந்த வகையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பென்டகன் அதிகாரி காஷ்யப் பட்டேல், அமெரிக்க புலனாய்வு அமைப்பு எப்.பி.ஐ. இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், "காஷ்யப் ஒரு சிறந்த வழக்கறிஞர் மற்றும் புலனாய்வு அதிகாரி ஆவார். அவர் 'அமெரிக்காவிற்கு முன்னுரிமை' கொள்கையை பின்பற்றுகிறார்" என கூறியுள்ளார். காஷ்யப் பட்டேலின் நியமனம், எப்.பி.ஐ. இயக்குநராக இருக்கும் கிறிஸ்டோபர் ரே மீதும் டிரம்பின் அதிருப்தியை காட்டுவதாக அமெரிக்க அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.