அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், அமெரிக்காவில் அகதிகளுக்கான குடியேற்றத்தை தற்காலிகமாக நிறுத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, 27-ந்தேதி முதல் அகதிகளின் வருகைக்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், அமெரிக்காவில் அனுமதிப்பெற்ற அகதிகள் ஏற்கனவே இந்நாட்டுக்கு நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது, டிரம்ப் நிர்வாகம் ஏற்கனவே அனுமதி பெற்ற அகதிகளின் பயணத்தை ரத்து செய்து, மறு உத்தரவு வரும் வரை அகதிகள் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது என அறிவித்துள்ளது.