அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குனராக முன்னாள் எம்.பி. துளசி கபார்டு நியமிக்கப்பட்டுள்ளார்.
20 ஆண்டுகளாக தேசிய பாதுகாப்பு துறையில் பணியாற்றிய துளசி, டிரம்பின் ஜனாதிபதி பிரசாரத்தில் முக்கிய பங்கு வகித்தார். அவர், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை எழுப்பி, டிரம்பின் கொள்கைகளை வாக்காளர்களிடம் தெளிவுபடுத்தினார். கமலாவுடன் நேரடியாக விவாதத்தில் கலந்து கொண்டு, டிரம்புக்கு ஆதரவாக பங்கெடுத்தார். இதனால், டிரம்பின் நம்பிக்கையை பெற்ற அவர், நாட்டின் மிக முக்கியமான பதவியான உளவுத்துறை இயக்குனர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.