தென் ஆப்பிரிக்காவிற்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியை நிறுத்த உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்ற பிறகு, டொனால்டு டிரம்ப் பல்வேறு அதிரடி உத்தரவுகளையும் அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார். அதன்படி, தென் ஆப்பிரிக்காவிற்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியை நிறுத்த உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து டிரம்ப் தெரிவித்ததாவது: "தென் ஆப்பிரிக்காவில் புதிய நில அபகரிப்பு சட்டம் அமலாகியுள்ளது. இதனால் பெரிய அளவில் மனித உரிமை மீறல் நடைபெறுகிறது. இதற்கு அமெரிக்கா துணை நிற்காது. எனவே, அந்நாட்டிற்கு வழங்கப்படும் நிதி உதவியை நிறுத்த முடிவு செய்துள்ளோம்" என்று கூறினார். இந்த அறிவிப்பு, அமெரிக்காவின் வெளிநாட்டு உதவி கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.