டொனால்டு டிரம்ப், பணய கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் ஹமாஸ் நரக விலை கொடுக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்க உள்ள டிரம்ப், அதற்கு முன்னர் ஹமாஸ் ஆயுதக்குழு பணய கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் மத்திய கிழக்கில் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார். "நான் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், பணய கைதிகளை விடுதலை செய்யாவிட்டால், ஹமாஸ் மீது அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்," என்று அவர் எச்சரித்துள்ளார்.