அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆகஸ்ட் 24 ஆம் தேதி ஜார்ஜியா நீதிமன்றத்தில் சரணடைய உள்ளதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்க, டிரம்ப் முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஃபுல்டன் மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ட்ரம்ப் உள்ளிட்ட 18 பேர் மீது இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, கொலம்பியா நீதிமன்றத்தில் இது தொடர்பான மற்றொரு வழக்கு விசாரணை நடைபெற்றது. அதில், நாடாளுமன்ற வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், டிரம்ப் மீதான குற்றத்தையும் கொலம்பியா நீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது. இவை தவிர, அவர் மீது மேலும் இரு குற்ற வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக அரசாங்க ரகசிய ஆவணங்களை பதுக்கி வைத்தது மற்றும் நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் ஆக இரு வழக்குகளிலும் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவரே சரண் அடைவதாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.