பிரிக்ஸ் நாடுகள் டாலரின் மாற்றாக புதிய கரன்சியை உருவாக்க முயற்சித்தால், அதற்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினரான ரஷியா மற்றும் சீனா, அமெரிக்கா டாலரின் மாற்றாக புதிய பிரிக்ஸ் கரன்சியை உருவாக்க முயற்சிக்கின்றன. இந்நிலையில், அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்ட டொனால்டு டிரம்ப், இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, "பிரிக்ஸ் நாடுகள் டாலரின் மாற்றாக புதிய கரன்சியை உருவாக்க முயற்சித்தால், அதற்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும். அவர்கள் அமெரிக்க பொருளாதாரத்தில் விற்பனை செய்ய முடியாது. சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை மாற்ற முடியாது, எந்த நாடும் அதை மாற்ற முடியாது" என்று தெரிவித்துள்ளார்.