துனிசியாவில் படகுகள் கவிழ்ந்து விபத்தானதில் 28 பேர் பலியாகினர்.
ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார நெருக்கடியால், ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்லுகின்றனர். பெரும்பாலும், அவர்கள் கடல் மார்க்கத்திலுள்ள படகுகளில் பயணம் செய்ய முற்படுகின்றனர். ஆனால் இதிலிருந்து பல பயணங்கள் ஆபத்துக்களுடன் முடிகின்றன. கடந்த புதன்கிழமையன்று, துனிசியா இரண்டு படகுகளை ஐரோப்பாவை அடைவதற்காக கடலில் அனுப்பியது. மொத்தமாக 110 பேர் பயணித்த இவை, எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர். 83 பேர் கெர்கென்னா தீவுகளில் மீட்கப்பட்டனர். இந்த இடம்பெயர்ந்தவர்கள் வட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என துனிசியாவின் தேசிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.