துனிசியாவில் உள்ள டிஜெர்பா பகுதியில், யூத வழிபாட்டு தளம் ஒன்றில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. ஆலயத்திற்குள் யூதர்கள் வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, காவலாளி ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தில், சக காவலர்கள் 2 பேரும், பொதுமக்கள் இருவரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, வழிபாட்டுத் தலத்தில் இருந்த அனைவரையும் ஆலயத்திற்குள் வைத்து பூட்டி, பிணைக் கைதிகளாக காவலாளி அடைத்து வைத்துள்ளார். ஆலயத்திற்குள் இருந்த மக்களை மீட்பதற்கு காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். சுமார் 4 மணி நேரத்திற்கு துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் காவலாளி சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, பொதுமக்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.