துனிசியா - யூத ஆலயத்தில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் பலி

May 10, 2023

துனிசியாவில் உள்ள டிஜெர்பா பகுதியில், யூத வழிபாட்டு தளம் ஒன்றில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. ஆலயத்திற்குள் யூதர்கள் வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, காவலாளி ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தில், சக காவலர்கள் 2 பேரும், பொதுமக்கள் இருவரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, வழிபாட்டுத் தலத்தில் இருந்த அனைவரையும் ஆலயத்திற்குள் வைத்து பூட்டி, பிணைக் கைதிகளாக காவலாளி அடைத்து வைத்துள்ளார். ஆலயத்திற்குள் இருந்த மக்களை மீட்பதற்கு […]

துனிசியாவில் உள்ள டிஜெர்பா பகுதியில், யூத வழிபாட்டு தளம் ஒன்றில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. ஆலயத்திற்குள் யூதர்கள் வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, காவலாளி ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தில், சக காவலர்கள் 2 பேரும், பொதுமக்கள் இருவரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, வழிபாட்டுத் தலத்தில் இருந்த அனைவரையும் ஆலயத்திற்குள் வைத்து பூட்டி, பிணைக் கைதிகளாக காவலாளி அடைத்து வைத்துள்ளார். ஆலயத்திற்குள் இருந்த மக்களை மீட்பதற்கு காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். சுமார் 4 மணி நேரத்திற்கு துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் காவலாளி சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, பொதுமக்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu