துருக்கியில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 38 பேர் கைது

April 29, 2024

ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் துருக்கி ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், கோரம், அடானா, காசியன்டெப், ஆய்டின், கேசெரி, மெர்சின் ஆகிய மாகாணங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துருக்கியில், ஐஎஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 முதல் துருக்கியில் அரங்கேறிய பல்வேறு தாக்குதல்களுக்கு ஐ எஸ் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இஸ்தான்புல் கிறிஸ்தவ […]

ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் துருக்கி ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், கோரம், அடானா, காசியன்டெப், ஆய்டின், கேசெரி, மெர்சின் ஆகிய மாகாணங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துருக்கியில், ஐஎஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 முதல் துருக்கியில் அரங்கேறிய பல்வேறு தாக்குதல்களுக்கு ஐ எஸ் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இஸ்தான்புல் கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்த தாக்குதலுக்கு இந்த இயக்கத்துக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. அதன் பெயரில் துருக்கி அதிகாரிகள் தேடுதல் வேட்டை மேற்கொண்டு 38 பேரை கைது செய்துள்ளனர். மேலும், தேடுதலின் போது அதிக அளவில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணயங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
Ks-7 இஸ்ரேல் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமையில் இருந்து ஹமாஸ் அமைப்பு தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வருவதில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர்க்களத்தில் இருக்கிறது. இதனால் காசா முழுவதும் உணவு, குடிநீர், மின்சாரம் உட்பட அனைத்து செய்திகளையும் துண்டித்துள்ளது. தற்போது ஐந்தாவது நாளாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்தியா 24 மணி நேர அவசர சேவையை அறிவித்திருக்கிறது. இதில் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் 24 மணி நேரமும் செயல்படும் இந்தியர்களுக்கான அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்களின் நிலையை தெரிந்து கொள்ளவும் அவர்களின் உறவினர்களுக்கு இங்கு வெளியுறவுத் துறையில் ஒரு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸாப் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 180011778797 இலவச எண் +91-11-23012113 +91-11-23014104 +91-11-23017905 +919968291988 Emergency-Helpline-Notification-for- Indians-in-Israel இந்திய அவசர உதவி எண், இஸ்ரேல் போர், இஸ்ரேல் வாழ் இந்தியர்கள்,Emergency Helpline Notification for Indians in Israel இந்தியா
1 2 3 806

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu