நேட்டோ அமைப்பில் ஸ்வீடன் இணைவதற்கு அனுமதி அளிப்பது தொடர்பான வாக்கெடுப்பு நடத்த துருக்கி நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா படை எடுத்ததை அடுத்து பாதுகாப்பு கருதி நேட்டோ கூட்டமைப்பில் இணைய ஐரோப்பிய நாடுகளான ஸ்வீடனும், பின்லாந்தும் விரும்பின. இதற்கு துருக்கி உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் சம்மதிக்க வேண்டும். இந்நிலையில் தங்கள் நாட்டில் உள்ள குர்து பிரிவினைவாதிகளுக்கு ஸ்வீடன் ஆதரவு அளிப்பதாக கூறி ஸ்வீடன் நேட்டோ இணைவதற்கு துருக்கி முட்டுக்கட்டை ஏற்படுத்தி வந்தது. இந்த சூழலில் தற்போது நேட்டோ அமைப்பில் ஸ்வீடன் இணைவதற்கு அனுமதி அளிப்பது தொடர்பான வாக்கெடுப்பிற்கு துருக்கி நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.