கருங்கடலில் துருக்கி கப்பல் மாயம் கருங்கடலில் 12 பேருடன் பயணித்த துருக்கி கப்பல் ஒன்று மாயமாகியுள்ளது.
இதனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. துருக்கியின் வடக்கு பகுதியில் சோம்புல்டாக் மாகாணத்தில் கருங்கடலில் சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இப்பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த புயல் வீசியது. இந்நிலையில், 12 பயணிகளுடன் சென்ற அந்த கப்பல் மாயமாகியுள்ளதாக தகவல் வந்துள்ளது. மோசமான வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக கப்பலை தேடும் பணி சவாலாக உள்ளது. கப்பலை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது வானிலை தெளிவான பிறகு மீண்டும் மீட்பு நடவடிக்கைகள் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.