தூத்துக்குடியில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான உப்பு சேதம் - நஷ்டத்தில் வியாபாரிகள்

December 28, 2023

அண்மையில் தூத்துக்குடி மாவட்டத்தில் அதி கனமழை பெய்தது. அப்போது, சுமார் 6 லட்சம் டன் உப்பு, மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதன் மதிப்பு 100 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. இதனால், உப்பு வியாபாரிகளுக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் 2வது பெரிய உப்பு உற்பத்தியாளராக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது. இங்கு, கிட்டத்தட்ட 35000 பேர் உப்பள தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இங்கு ஏற்பட்ட வெள்ளத்தால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உப்பளங்களில் […]

அண்மையில் தூத்துக்குடி மாவட்டத்தில் அதி கனமழை பெய்தது. அப்போது, சுமார் 6 லட்சம் டன் உப்பு, மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதன் மதிப்பு 100 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. இதனால், உப்பு வியாபாரிகளுக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் 2வது பெரிய உப்பு உற்பத்தியாளராக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது. இங்கு, கிட்டத்தட்ட 35000 பேர் உப்பள தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இங்கு ஏற்பட்ட வெள்ளத்தால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உப்பளங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் டன் உப்பில், 6 லட்சம் டன் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. எனவே, மிகப் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நேரில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu