தூத்துக்குடி மீனவர்கள் கைது

September 18, 2024

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோணி மகாராஜா மற்றும் 22 மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். தருவைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி மகாராஜா, 'அந்தோணி தேன் டெனிலா' என்ற விசைப்படகில் கடந்த மாதம் 20-ம் தேதி கடலுக்குச் சென்று மீன்பிடித்தனர். ஆனால், அவர்கள் சர்வதேச எல்லையை தாண்டி இலங்கை பகுதியில் மீன் பிடித்ததாகக் கூறி, 22 மீனவரும் கைது செய்யப்பட்டு, படகும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வாரம், இலங்கை நீதிமன்றம் 12 மீனவர்களுக்கு தலா ரூ.1.5 கோடி […]

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோணி மகாராஜா மற்றும் 22 மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

தருவைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி மகாராஜா, 'அந்தோணி தேன் டெனிலா' என்ற விசைப்படகில் கடந்த மாதம் 20-ம் தேதி கடலுக்குச் சென்று மீன்பிடித்தனர். ஆனால், அவர்கள் சர்வதேச எல்லையை தாண்டி இலங்கை பகுதியில் மீன் பிடித்ததாகக் கூறி, 22 மீனவரும் கைது செய்யப்பட்டு, படகும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வாரம், இலங்கை நீதிமன்றம் 12 மீனவர்களுக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. அபராதம் செலுத்த தவறினால், 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. மேலும், 10 மீனவர்கள் நீதிமன்றக் காவலில் உள்ளனர். இன்று புத்தளம் நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை நடைபெற்றது, 10 மீனவர்களில் 3 பேர் உடல்நலக்குறைவால் ஆஜராகவில்லை, 7 பேர் ஆஜராகினர். நீதிபதி 10 பேருக்கும் ரூ.3.5 கோடி அபராதம் மற்றும் 6 மாத சிறை தண்டனை விதித்தார். இதற்குப் பின்னர், 7 மீனவர்கள் சிறைசாலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu