இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் மையமாக தூத்துக்குடி மாவட்டத்தின் வ உ சி துறைமுகம் மாறவுள்ளது. அதற்காக 50000 முதல் 80000 கோடி வரை நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, துறைமுகத்தின் மேம்பாட்டுக்காக கூடுதலாக 6000 கோடி செலவிடப்பட உள்ளது.
இந்தியாவின் துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் டி கே ராமச்சந்திரன் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கண்ட்லா, பாரதிப் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களை பசுமை ஹைட்ரஜன் மையங்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் மையமாக தூத்துக்குடி துறைமுகம் மாற உள்ளது என தெரிவித்துள்ளார். இது பற்றி ஏற்கனவே துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.