பிரேசிலில் ஏக்கர் மாகாணத்தில் நடந்த விமான விபத்தில் ஒரு குழந்தை உட்பட 12 பேர் பலியாகியுள்ளார்.
பிரேசிலின் அமேசானாஸ் மாகாணத்தில் என்விரா என்ற நகரம் உள்ளது. இந்த நகரத்திற்கு சிறிய விமானம் ஒன்று சென்றது. இதில் ஒரு குழந்தை உட்பட 12 பயணிகள் இருந்தனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானம் விபத்தில் சிக்கியது. அங்கு உள்ள ஏக்கர் மாகாணத்தின் தலைநகரான ரியோ பிரான்சிகோ விமான நிலையத்தின் அருகில் சென்று கொண்டிருக்கும்போது அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் குழந்தை உட்பட 12 பேரும் பலியாகி உள்ளனர். விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை செய்கின்றனர். பிரேசில் கடந்த மாதம் நடந்த விமான விபத்தில் 14 பேர் இறந்தனர். அதில் 12 பேர் பயணிகள் இரண்டு பேர் விமான ஊழியர்கள். தற்போது நடந்த விபத்து சம்பவம் இரண்டாவதாகும்.