ட்விட்டர் இந்தியா நிறுவனம் 2022-ம் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் வருவாய் 82% அதிகரித்து, 157 கோடியாக உள்ளது. அதேவேளையில், நிறுவனத்தின் நிகர இழப்பு 32 கோடியாக பதிவாகி உள்ளது. மேலும், நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கான செலவுகள் 182 கோடியாக பதிவாகியுள்ளது.
மேலும், கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தில் நிறுவனம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், “நிறுவனத்தின் செயல்திறன் திருப்திகரமாக உள்ளது” என தெரிவித்துள்ளது. மேலும், இனி வரும் ஆண்டுகளில், நிறுவனத்தின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என கூறியுள்ளது. கிட்டத்தட்ட 90% ட்விட்டர் இந்தியா பணியாளர்களை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்துள்ள நிலையில், இந்த செய்தி வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.