கடந்த நவம்பர் மாதத்தில், ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கையகப்படுத்தினார். 44 பில்லியன் டாலர்கள் மதிப்பில் நிறுவனம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது, ட்விட்டர் நிறுவனத்தின் மதிப்பு தொடர் சரிவுகளை சந்தித்து, 44 பில்லியனில் மூன்றில் ஒரு பங்கு மதிப்பை மட்டுமே கொண்டுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு, எலான் மஸ்க் பல்வேறு அதிரடி முடிவுகளை கொண்டு வந்தார். ட்விட்டர் ப்ளூ சேவை அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், மக்கள் மத்தியில் இதற்கான வரவேற்பு இல்லை. மேலும், நிறுவனத்திற்கு விளம்பரம் மூலம் கிடைக்கும் வருவாய் பாதி அளவுக்கு கீழ் சரிந்தது. தற்போதைய நிலையில், ட்விட்டர் நிறுவனத்தில் எலான் மஸ்கின் முதலீட்டு மதிப்பு 8.8 பில்லியன் டாலர்களாக உள்ளது என ப்ளூம்பெர்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.