கடந்த சில நாட்களில் ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 50 சதவீதத்துக்கும் மேலான பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நிறுவனத்திற்காக பணி செய்த 4400 ஒப்பந்த பணியாளர்களும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, நிறுவனத்தின் மின்னஞ்சல் மற்றும் இதர தளங்களில் இருந்து ஒப்பந்தப் பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக பிளாட்பார்மர் மற்றும் ஆக்ஸியோஸ் ஆகியவற்றின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தனக்கு கீழ் பணி செய்து வந்த ஒப்பந்ததாரர்களின் மின்னஞ்சல்கள் நீக்கப்பட்டதை நிர்வாகிகள் கண்டறிந்த பின்னரே இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இவ்வாறு, ட்விட்டர் தளத்துடன் ஆன இணைப்புகள் துண்டிக்கப்பட்ட ஒப்பந்தப் பணியாளர்கள், இனிமேல் ட்விட்டரில் பணி செய்ய இயலாது. அவர்கள், இதுவரை பணி செய்ததற்கான பதிவுகள் கூட சரி பார்க்கப்படாமல் அவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.