ட்விட்டர் பணியாளர்கள் மீண்டும் பணி செய்ய அழைப்பு

November 8, 2022

ட்விட்டர் நிறுவனம், கடந்த வாரத்தில், கிட்டத்தட்ட 50% ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இந்நிலையில், சில ஊழியர்களுக்கு மீண்டும் நிறுவனத்தில் சேர மறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வாரத்தில், சுமார் 3000-க்கும் மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், 12 க்கும் அதிகமான பணியாளர்கள் நிறுவனத்திற்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர். ட்விட்டர் நிறுவனத்தால், சிலர் தவறுதலாக பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், அவர்களே மீண்டும் அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "தவறுதலாக திறமையான ஊழியர்கள் சிலரும் பணி நீக்கம் […]

ட்விட்டர் நிறுவனம், கடந்த வாரத்தில், கிட்டத்தட்ட 50% ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இந்நிலையில், சில ஊழியர்களுக்கு மீண்டும் நிறுவனத்தில் சேர மறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த வாரத்தில், சுமார் 3000-க்கும் மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், 12 க்கும் அதிகமான பணியாளர்கள் நிறுவனத்திற்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர். ட்விட்டர் நிறுவனத்தால், சிலர் தவறுதலாக பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், அவர்களே மீண்டும் அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "தவறுதலாக திறமையான ஊழியர்கள் சிலரும் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. அவர்களின் சேவை மற்றும் பணி அனுபவம் நிறுவனத்திற்கு தேவை. எனவே, தயவு செய்து மீண்டும் பணிக்கு திரும்ப கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்" என்ற செய்தி ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திறமையான ஊழியர்களை மட்டுமே கைவசம் வைத்துக் கொள்ள, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று பொதுவாக பேசப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu