உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போரில் தற்போது மாஸ்கோவிற்கு குறி வைத்த 2 டிரோன்களை உக்ரைன் ஏவி உள்ளது. இது ரஷ்ய விமானப்படையினால் வீழ்த்தப்பட்டது.
ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைனை தனது இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. கடந்த 530 நாட்களாக இந்த போர் நடைபெற்று வருகின்றது. போர் முடிவுக்கு வராத நிலையில் சில மாதங்களாக ட்ரோன்கள் மூலம் இரு நாடுகளும் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.
தற்போது ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவை நோக்கி உக்ரைன் 2 டிரோன்களை ஏவியது. இது மாஸ்கோவில் தெற்கு புறநகர் பகுதிகளிலும், தலைநகரில் மேற்கு பகுதிகளிலும் ஏவப்பட்டது. இதனை ரஷ்ய வீழ்த்தியுள்ளது. மாஸ்கோ நகரை குறி வைத்து உக்ரைன் இதோடு ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக தாக்குதல் நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.