ஜெர்மனியில் உள்ள மக்டக்பெர்க் நகரில் ஒரு கார் வேகமாக சந்தைக்குள் புகுந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி ஜெர்மனியில் உள்ள மக்டக்பெர்க் நகரின் மையப்பகுதியில் சந்தை அமைக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு, அங்கு குவிந்த மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு கார் வேகமாக சந்தைக்குள் புகுந்து வாகனத்தில் பயணித்தவர்களை மோதியது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். கார் விபத்தை ஏற்படுத்திய 50 வயதான சவுதி அரேபியாவை சேர்ந்த டாக்டரை போலீசார் கைது செய்தனர். இது பயங்கரவாத தாக்குதல் என முதற்கட்ட விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது.