250 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லும் இரண்டு ரயில்கள் தயாரிப்பு

சென்னை ஐசிஎப்-ல் 250 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லும் 2 ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஐசிஎப் தொழிற்சாலை 1955 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த நேருவால் தொடங்கப்பட்டது. இங்கு வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட பல்வேறு ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான ரயில் பெட்டிகள் தயாரிப்பு பணியில் இந்த தொழிற்சாலை முக்கிய பங்காற்றி வருகிறது. அதில் இதுவரை இல்லாத அளவு மிகவும் அதிவேகத்தில் 2 ரயில்கள் தயாரிக்கப்பட உள்ளன. இது […]

சென்னை ஐசிஎப்-ல் 250 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லும் 2 ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

ஐசிஎப் தொழிற்சாலை 1955 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த நேருவால் தொடங்கப்பட்டது. இங்கு வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட பல்வேறு ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான ரயில் பெட்டிகள் தயாரிப்பு பணியில் இந்த தொழிற்சாலை முக்கிய பங்காற்றி வருகிறது. அதில் இதுவரை இல்லாத அளவு மிகவும் அதிவேகத்தில் 2 ரயில்கள் தயாரிக்கப்பட உள்ளன. இது மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இந்த தயாரிப்பு தொடர்பாக கடந்த நான்காம் தேதி மத்திய ரயில்வே அமைச்சகம் சார்பில் ஐசிஎப் தொழிற்சாலைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இந்த ரயில்களை தயாரிப்பதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயிலின் வேகம் 180 கிலோமீட்டர் ஆகும். தற்போது தயாரிக்கப்படும் இரண்டு ரயில்களும் 8 பெட்டிகளை கொண்டதாக இருக்கும். மேலும் மத்திய ரயில்வே அமைச்சகம் இவ்வளவு அதிவேகத்தில் செல்லும் ரயிலை தயாரிப்பது இதுவே முதல் முறை என்றும், பணிகள் முடிந்து ரயில்கள் இயக்கப்பட்டால் அது புதிய மைல் கல்லாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu