ஷாங்காய் நகரை கடுமையாக தாக்கியது பெபின்கா சூறாவளி

கடந்த 75 ஆண்டுகளில் ஷாங்காயை தாக்கிய மிகப்பெரிய சூறாவளி பெபின்கா ஆகும். கிழக்கு சீனாவின் கடற்கரை பகுதிக்கு அருகில் மையமாக இருந்த 'பெபின்கா' சூறாவளி, நேற்று சீனாவின் ஷாங்காய் நகரை கடுமையாக தாக்கியது. ஷாங்காயின் கிழக்கில் உள்ள லிங்காங் நியூ சிட்டியின் கடலோரப் பகுதிகளில் சூறாவளி வீசியது. கடந்த 75 ஆண்டுகளில் ஷாங்காயை தாக்கிய மிகப்பெரிய சூறாவளி இது. முந்தைய முன்னெச்சரிக்கையாக 4 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். சூறாவளிக்கு முன்னால் நூற்றுக்கணக்கான விமானங்கள் மற்றும் […]

கடந்த 75 ஆண்டுகளில் ஷாங்காயை தாக்கிய மிகப்பெரிய சூறாவளி பெபின்கா ஆகும்.

கிழக்கு சீனாவின் கடற்கரை பகுதிக்கு அருகில் மையமாக இருந்த 'பெபின்கா' சூறாவளி, நேற்று சீனாவின் ஷாங்காய் நகரை கடுமையாக தாக்கியது. ஷாங்காயின் கிழக்கில் உள்ள லிங்காங் நியூ சிட்டியின் கடலோரப் பகுதிகளில் சூறாவளி வீசியது. கடந்த 75 ஆண்டுகளில் ஷாங்காயை தாக்கிய மிகப்பெரிய சூறாவளி இது.

முந்தைய முன்னெச்சரிக்கையாக 4 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். சூறாவளிக்கு முன்னால் நூற்றுக்கணக்கான விமானங்கள் மற்றும் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு, நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன. நகரின் உட்பகுதியில், மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் வாகனங்கள் செல்லவேண்டும் என வேகவரம்பு அமல்படுத்தப்பட்டது.

சூறாவளியின் காரணமாக மணிக்கு 151 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதால், சிவப்பு எச்சரிக்கையை அதிகாரிகள் வெளியிட்டனர். 'பெபின்கா' சூறாவளி ஜப்பான், பிலிப்பைன்சின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளை கடந்து சென்றது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 'பெபின்கா' சீனாவின் ஹைனான் தீவையும் கடந்தது. அப்போது 4 பேர் உயிரிழந்தனர், 95 பேர் காயமடைந்தனர். தற்போது, இந்த சூறாவளி வடமேற்கே நகர்ந்துள்ளதால், ஜியாங்சு, ஜெஜியாங் மற்றும் அன்ஹுய் மாகாணங்களில் கனமழை மற்றும் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu